Friday 18 March 2011

வளர்ச்சி - இடப்பெயர்வு - மறுவாழ்வு



வளர்ச்சிக்கும் அடிப்படை உரிமைகளுக்குமான முரண் தற்போது உலகில் முக்கிய பேசு பொருளாகியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகப் பெரிய அளவில் இன்று நிலப்பறிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையை உலகத் தரமான ‘சிங்காரச் சென்னை’யாக மாற்றும் முயற்சியில் குடிசை மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன.

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என்கிற பெயரில் வீடற்றோர் கட்டாயமாக அகற்றப்படுகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகளைச் சட்டப்புர்வமாக்கும் திட்டத்துடன் இந்திய அரசு நிலப்பறிப்பு மற்றும் மறுவாழ்வு தொடர்பாக புதிய கொள்கை அறிவிப்பு, புதிய சட்டம் இயற்றுதல் ஆகிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இவை குறித்த நுண்மையான ஆய்வாக அமைந்துள்ளது இந்நூல்.

நூல்: “சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்”
ஆசிரியர்: அ. மார்க்ஸ்.
விலை : ரூ. 45

No comments: