Tuesday 15 March 2011

வன்முறை / எதிர்வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு...


பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு முன் / பின் என இடைக்கோடிட்ட சுதந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில், தமிழகம் குறித்து கட்டமைக்கப்பட்ட அமைதிப் பூங்கா என்ற சித்திரம், கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளால் கலைத்துப் போடப்பட்ட பின்னணியில், அங்கு வாழும் இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார வாழ்வினூடாக வகுப்புவாதத்தின் மூலாதாரத்தையும், வன்முறை மற்றும் எதிர்வன்முறைச் செயல்பாடுகளின் பாதிப்புக் கோரங்களையும் தன்னுடைய மின்னல் எழுத்துக்களால் நெடுங்கதைகளாக... மிர்ஸா காலிபின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்ட இந்த நூலின் வழியாக நம் கண்கள் பனிக்கச் செய்கிறார் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன். ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், இரு குறுநாவல்கள் எழுதியிருக்கும் இவரின் முதல் கதைத் தொகுப்பு நூல் இது.

இந்நூலுக்கு தோழர். ஆதவன் தீட்சண்யா எழுதிய முன்னுரையை இங்கே சென்று படிக்கலாம். அதனை இங்கும் பதிந்துள்ளோம்.

No comments: